அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Monday, February 10, 2014












மஞ்சள் வெயில் பூத்த வானம்
பனை மரங்களின் தாலாட்டு
பச்சை கிளிகளின் சங்கீதம்

யாழ் தொட்டால் எம்
காதுகளுக்கு எட்டிவிடும்
மனதோடும் ஒட்டிக்கொள்ளும்

நற்பண்பும் அனைவரையும்
அரவணைக்கும் நல்லுணர்வும்
யாழ் மக்களின் உடைமைகள்

சோலைக் குயில்களின் சங்கீதமும்
காலை எழுந்ததும் மனதுக்கு
சுகம் சேர்க்கும்...

வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்

நெஞ்சோடு ஒட்டிய கவிதைகள்

காதுகளில் இனிமையாய்
ஒலிக்கும் செந்தமிழும்...

வானுயர எட்டி தலை நிமிர்ந்து
நிற்கும் பனைமரங்களும்
மனதுக்குள் மலர்வனங்கள்...

என்றுமே இயற்க்கை நிறைந்த
"யாழ்"


                 -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -