அதிகம் வாசித்தவை

Archive for April 2014

மழைக்கால நினைவு

By : Unknown















இலை விரித்து
செய்த குடை
மழை நனைகையில்..
அதனுள்ளே....

என் தோள்களில்
நீ சாய்ந்து
இமைகள் மூடிய
அந்த வேலை

மெய் மறந்தே
நானும் நின்று
உன்னை ரசித்த
அந்த வேலை...

மனதை விட்டு
மறக்காத
மழைக்காலத்து
மனது நிறைந்த
நினைவுகள்...

இன்றைய மழையில்
கண்முன்னே வந்து
மறைகிறதே..


           - முகம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 


அந்தி மாலை பெய்த மழை

By : Unknown



















மழை பெய்து ஓய்ந்து
இருந்த அந்த
அழகான அந்தி மாலை
பொழுது சாயும் நேரம்

ஆங்காங்கே குளித்து முடிந்து
தலைதுவட்ட மறந்த அம்
மரத்தின் பச்சைப்பசேலெனும்
பச்சை வண்ண இலைகள்

மெல்லமாய் தட்டிசெல்லும்
தென்றலாய் கூடவே
இதமான சாறல்கள் என்
மனைதை கொள்ளை கொள்ள

இலேசாக இமைகள் மூடவே
இதமான நினைவுகள் எல்லாம்
இமை திறக்காமலே என்
இரு விழிகளையும் நனைக்கிறது..


              -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 


- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -