அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Saturday, February 8, 2014









ஒரு வேலை உணவுக்காக
ஓராயிரம் தடவைகள்
செத்துச் செத்து பிழைக்கிறான்
படகிலேரிய ஒவ்வொரு மீனவனும்

ஆழமான கடலுக்குள்ள பயணம்
போகின்றோம் நாங்க
வாழவும், வறுமையைப் போக்க
வழீயின்றி வலையை வீசுகிறோம்

புயலடிக்கும் நேரங்களிலும் உள்ளே
பொழைப்புக்காய் போகிறோம்
ஒரு சான் வயிற்றுக்காய்
அடகு வைக்கிறோம் வாழ்க்கையை

நீண்ட நீலக்கடல் சென்றவனும்
கரை திரும்பாமல் போனால்
காத்துக்கிடக்கிறது வீட்டிலே
கருப்பு கண்ணீர் அஞ்சலி...

அலைகளோடு சேர்ந்து
ஆட்டம் போடுவது
செலுத்தும் படகு மட்டுமல்ல
இவனது வாழ்க்கையும் தான்

உணவுக்காய் மீன் தேடப்
போகின்ற இவனும்
ஒரு நாள் இறையாகிப் போகிறான்
அந்த மீனுக்கே...

கடல் நீர் எல்லாம் உப்பால்
செறிந்ததாலோ என்னவோ
இவனின் கண்ணீரின் விலை கடல்
அன்னைக்கு தெரியாமலே போய்விட்டது.


           - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -