அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Thursday, February 13, 2014














ஒரு நாள் பெய்த
பெருமழை...

நனைந்து நின்ற உன்னை
குடை கொண்டு மூடவே
என்னருகில் அழைத்தேன்...

குடையை பறித்து எறிந்து
என்னையும் இழுத்துவிட்டாய்
மழையில் நனைய...

உன் முகத்திலும் மூக்கு நுனியிலும்
ரோஜா இதழில் பூத்த பனி போல
மழை நீர் தங்கி நிற்க...

பூத்து விரிந்த மலராக
பளிச்சிட்ட உன் முகத்தை
ஒவ்வொரு மழையிலும்
என்னால் மறக்க முடிவதில்லை...

உன்னோடு இனைந்து நனைந்த
அம் மழை போல் இதுவரை
எம் மழையும் பெய்ததில்லை
என் மனதுக்குள்...

எங்கேனும் ஓரிடத்தில்
மழையை ரசிக்கும் போது
அன்று பெய்த மழையின்
ஈரச் சாரலாய் துளிகள்...

என்னுள் இன்னும்
சிலிர்த்து தெரிக்கின்றன...

கடந்த நினைவுகளில் சுரந்த
மேகங்களை கலைத்து
சொரித்தது போல...

"ஒரு நாள் பெய்த மழை"


                     -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -