அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, February 2, 2014













பேனா மை கொண்டு
எழுதப்படாத உணர்வுகள்
நிறைந்த வாழ்க்கை புத்தகம்

அடங்கியவை அனைத்துமே
உண்மையும், அனுபவமுமே
வரிகளாக கொண்டு

தோல் விழுந்த சுருக்கமும்
ஒட்டிய வயிருமே
உணர்த்தி விடுகின்றது
முதுமையை! வறுமையை!

அன்று நீ தத்தி தத்தி துளிர்
நடை நடக்கையில் பிள்ளையாய்
உன்னை தவறி விழ
விடாமல் தாங்கியவள்

இன்று தானே தள்ளாடிக் கொண்டு
தனிமையில் வதைபடுகிறாள்
நீ பிள்ளையாக இருந்தும்,
இல்லாது...

அழகாய் துளிர்ந்து
வாழ்ந்து கெட்டுதுதிர்ந்த
வயோதிப சருகாக "இவள்"

உட்கார்ந்து கொஞ்சம்
ஓய்வெடுக்க விடாமல்

வீசித்தான் கலைக்கிறது
அகங்காரம் தலைக்கேரிய
சுழன்று வரும் பசியும்,
வருமையும்,,,

இப்படியே நீண்டு கொண்டுதான்
சென்று கொண்டிருக்கின்றது
நீண்ட தொடர்கதையாக இப்
புத்தகம் மன்னறையை நோக்கி

மனித குலமெனும் நூலகத்தில்
மறைந்து போகும் நிலையில்
அனையப் போகும் மெழுகுதிரி போல்
முதுமையடைந்த இப் புத்தகம்


                           -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -