அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Wednesday, February 5, 2014


அடி சற்றுப் பெருத்தும்
இடை கொஞ்சம் சிருத்தும்
ஈன்ற குலை பெருத்த
தென்னையாய் அவளும்.....!

தாழ்ந்து தவறி விடாமல்
தன்/மானம் காத்திடவும்
வாழ்க்கையை தொடர
குவித்த இளநீர் குலையுடன்.....!

தென்னை விரித்த பாலை போல்
புன்னகையுடன் இவளும்
பாதை குறுக்கிட்டு அழைக்கிறாள்
பருக இளநீரும்.....!

பருத்த பருவ குலையை
பார்க்கும் போதே
தாகமும் எடுக்கிறது
தானாகவே......!

தேகத்தின் சூடும் அடங்கி
இறங்கி விடும்
இவள் விற்கும் இவ்விளநீர்
பருகும் வேலையில்.....!


                -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -