அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Thursday, March 13, 2014


















மலரின்
பிரசவ வலி
மலர் சூடும்
மாந்தர்களை விட
மரத்தின் கீழ்
தூங்கும்
நாய்களுக்குத்தான்
புரியுமாம் !

அதனால்தான் என்னமோ
நாய்கள்
பூப்பறிப்பதில்லை?

பூகம்பத்துடன் பூத்தாலும்
பூ சிரிக்கத்தவறவில்லை
அது நமக்குப்ப்ழக்கமில்லை!

பூவின் பூப்பு
பூவைக்கே புரியாதோ?
தேனின் இனிப்பு
பூவுக்கே தெரியாது!

மென்மையான
மலர் இதழ்களின் கண்ணீர்த்தேன்
மட்டும் அவ்வளவு கடினமாக
இருப்பதுவும் எதனாலோ?

மலரின் கண்ணீரை
உண்டு மகிழ்கின்றது
தேனீ
உனது கண்ணீரை மற்றவர்க்கு
விருந்தாக்கும்
பூவே ஒரு தாய் நீ


               - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -