அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Monday, March 10, 2014












தூங்காத இரவுகளில்
ஏங்கிடும்
என் நினைவுகளுக்கு
என்போல
விடிய விடிய விழித்திருக்கும்
நட்சத்திரங்களே சாட்சி!

உலா வந்த
தென்றல்கூட கண்டதே
இக்காட்சி!

தூக்கம் என்னை
தூக்கி வீசிவிட்டு
தூரத்தே
நடைபயிலப் போச்சி !

இத நினைக்கையிலே
கொதிக்குதடி
என் மூச்சி!

நிலாவே
உன் தோழியிடம் நீ
சொல்வாயா
என் சேதி!

உன்னுடன்
உலாக்கூட்டி வருவாயா
ஒரு தேதி!

அருகிலே நானிருந்தால்
அனுதினமும் பார்த்திருப்பேன்
தூரத்திலே நானிருக்க
நேரிலே காண்பதெப்போ?


        - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -