அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, March 11, 2014


















தடுக்கி நீ தண்ணீரில்
விழுந்தாயோ வெண்ணிலாவே ?
பிடித்து உனையாரும்
தள்ளினரோ சொல்லுவாயா ?

உயிரை மாய்க்க நீ
வீழ்ந்தாயோ
எனை பார்க்க
நீரில் தவழ்ந்தாயோ ?

துரத்த துரத்த ஓடுகிறாய்
துடித்து துடித்து நீ ஆடுகின்றாய் !

தூர நின்று நீ சிரிக்கின்றாய்
ஓரக் கண்ணடித்து அழைக்கின்றாய்!

தங்கத்தட்டு மிதக்குதடா
நீரில் பட்டு தெறிக்குதடா
நெஞ்சைத்தொட்டு
இழுக்குதடா!

அள்ளிப்பார்த்தேன் உள்ளங்கையில்
அதில் ஆடும் வதனம் தெரிந்ததடா !

ஊஞ்சலொன்று ஆடுதடா
காணும்போது
சஞ்சலங்கள் தீருதடா!


           - உமர் அலி முகம்மதிஸ்மாயில்

{ 1 கருத்துக்கள்... read them below or add one }

  1. அருமை..அருமை.. பாரதியாரை நினைவு படுத்தி செல்கிறது இக்கவிதை.. வாழ்த்துக்கள் !!

    ReplyDelete

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -