அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 2, 2014













இருள் நீ
விலக
இரையாகிறேன்
நான்...

நீயும்
ஒளிரவே
நானும்
உருகுகிறேன்...

உன்
மூச்சில்
காற்றுப்பட்டதும்
நடனமாடுகின்றேன்...

உன்
கையிலிருந்து
நழுவாது இருக்க ...

உருகிய
மெழுகால் நான்
உன் கரம்
பற்றிகொள்கிறேன்...

திரியை
பிரியும் வலியில்
அழுகிறது
உருகும் மெழுகு...

நாழிகை
நாழிகையாக
உனக்காகவே
உயிர் இழக்கின்றேன்...

மாளிகையாய்
மலர்ந்து இருந்த
மங்கை நானும்
மாய்ந்து போகிறேன்...


        - முஹம்மது ஆரிப் அஷ்ரஃப் ஹான்


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -