அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Friday, March 21, 2014














உற்றார் உறவினர் சுற்றமும்
நட்பும் எல்லாமே சூனியமே

முப்பது தாண்டுகிறது
நாப்பதை எதிர் நோக்கி

என்னை நோக்கி தான்
எம் மகனும் வரவில்லை

தீ பட்டு எறிவது போல்
மனப் பூ பற்றி எரிகிறது

தேனீ ஓன்று தீண்டாமல்
தேயும் ஒரு மலரிங்கு

சுடர் விடுகின்ற என் வாழ்வும்
சூனியமாய் ஆன தேனோ

படர் கோடிக்கும் கொப்பில்லை
தொடர்வதிலும் ஏதும் தவறில்லை

வல்லவன் எவனும் வரவில்லை
வாழ்வேதும் தரவுமில்லை

நாளை நாளை என்றே
நகர்கிறது என் வாழ்வும்


                  -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -