அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Thursday, March 20, 2014














பச்சை கம்பளங்கள்
விரித்த புல் வெளியும்
வீயடிக்கும் காற்றிலாடும்
வெண்ணிற திரை நீர்வீழ்ச்சியும்

கன்னம் சிவந்த வெட்கத்தில்
அந்தி நேர வானம்
கருங்கூந்தல் மேனியாய்
சாயும் பொழுதுகள்

காரிருள் மேகமாய் வானம்
நீண்ட மரங்கள் - அதிலே
சிணுங்கள்கலோடு மெல்லமாய்
சிறகு தட்டும் காதல் பறவைகள்

இயற்கை அன்னை அள்ளிதெளித்த
இக்காட்சிகளை ரசித்தபடியே
இதய அறைகளில் இருந்து இதமான
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

கண் பார்வை தொடும் தூரம்
வரை தனிமையே நீண்ட
ஒற்றையடிப் பாதையில் அவளோடு
நானும் பொடி நடை பழகையில்

என் தோள்கள் அவள் தோள்கலோடு
சிநேகம் கொள்ள துடிக்கையில்
எதிர்பாராமலே என் விரல்களோடு
அவள் விரல்களும் பின்னிப் பிணைய

இருவரின் இதயங்களும் அமைதியாய்
இதமான மௌன கீதங்கள் இயற்ற
இதழ்கள் மட்டும் கொண்ட காதலை
சொல்ல முனைந்து கொண்டே இருந்தது

இதழ்கள் முனைந்து தோற்றத்தை
உணர்ந்து எனது விழிகளும்
காதல் உணர்வுகளை எல்லாம்
தூதாய் அனுப்பியது அவள் விழியிடம்

புவிஈர்ப்பு சக்தியை அவளின்
விழிஈர்ப்பு சக்தியும் என்னில்
மோதியே என்னிரு விழிகளையும்
ஆட்கொண்டது சிறிது நேரம்

என் விழியில் வீழ்ந்தாலோ
அவளும் காதல் கொண்டாலோ
ஒரு சிறு புன்னகையாலே
என்னையும் காதலில் வீழ்த்திட்டால்

"என் விழி சொன்னா காதலில்"


                         -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -