அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, March 9, 2014












கோதி கோதி உரித்த
நார் அலகுகளில்
கொத்திக் கொண்டு
வந்தேன்

ஒன்று ஒன்றாய்
அழகாய் சேர்த்து
ஒட்டி ஒட்டிப் பின்னி
ஒப்பேத்தி விட்டேன்

நாரிலையில் ஒரு கூடு
நாங்கள் வாழ நாறிடாத வீடு

பொறியியல் படிக்காமலே
கச்சிதமான கட்டிட
வேலைப்பாடு நிறைந்தது
தூக்கனாங் குருவி கூடு

நங்கூரமிட்டு தொங்குகிற
நயமான வீடு
அழகிய தோட்டங்கள் மேலே
அசைந்தாடும் வீடு

வண்டுகள் இல்லாத மூங்கில்
காட்டிலே ஊமையாய் திரிகின்ற
தென்றலும் இங்கு வந்தால்
களிப்புடனே ஊஞ்சல் ஆட்டம்

கதவுகள் இல்லாத நிலை
கவலைகள் கொண்டதில்லை
சன்னல்களும் இங்கு இல்லை
சற்று சகித்துக் கொள்ளவேணும்

பின்னல்களும் உண்டு
சற்றும் பேதலித்ததில்லை
அவ்வழியே மங்காத வெளிச்சம்
மாறி மாறி உள்ளே தெரிக்கும்

குஞ்சுகளை ஏந்தியும்
குலவைகளும் இட்டு
குதூகலிப்பும், நிம்மதியும்
நேர்த்தியான வாழ்வு

சுற்றங்களும் உண்டு
சூழ்ச்சிகளோ இல்லை
பற்றியதோ வாழ்க்கை
பசுமை நிறைந்த வாழ்க்கை

தொங்கியாடும் வீட்டினுல்
தூக்கனாங் குருவியின்
"வாழ்க்கை"


    - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -