அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, January 12, 2014










மெல்லிய இருள்
சூழ்ந்து கொண்ட
ஓர் அழகிய
ஆற்றங்கரையோர
மணல் மேட்டில்
தனியாய் நானும்
அமர்ந்திருக்க...

அவளின் வருகைக்காய்
ஏங்கும் என்னைப்
போலவே...
நீயும் விண்மீன்களின்
வருகைக்காய் ஏங்கி
தவமிருக்க...

முழுமதியாய் நீ
உன்னில் நிரம்பி
வலிந்த ஒளி பட்டு
ஆற்று நீரும் சற்று
குளிர்ந்து காற்றுடன்
சேர்ந்து இதமாய்
வீச...

இன்னும் அதிகமாய்
நினைவூட்டுகிறது
அவள் இல்லாத
அந்த கொடுமையான
தனிமையை...


   - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -