அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, January 14, 2014











மதம் மனிதனை பிடித்தது
மனிதனுக்கு மதம் பிடித்தது
பிறகு பார்த்தால் மனிதனுக்கு
மனிதனையே பிடிக்கவில்லை

மதம் பிடித்து மனிதர்களை
கொன்றது யானை
எந்த மதம் என்று தான்
எவருக்குமே தெரியவில்லை

கீதையில் உள்ளதெல்லாம்
வெறும் கிறுக்கலாய் ஆனது
கோயில் மணி கூட ஏதோ
கேலிக் கூத்தாய் ஆனது

நபிகள் (ஸல்) கூறியதெல்லாம்
முகவரி அறுந்து போகுது
இன்றைய இளசுகள் எல்லாம்
இஸ்லாத்தை மறந்து தூரம் போகுது

இயேசு சிலுவையை சுமக்க
மனித பாவமோ மலையளவு குவிய
கிறிஸ்தவத்தின் இன்றைய நிலை
கிழித்து வீசிய காகிதமாய்

புத்தர் சொன்னது புதுமை ஆச்சு
போதி மரமோ ஈரமிழந்து போச்சு
பௌத்தம் என்பதே இன்று காவி
உடைக்கே உரியதாய் ஆச்சு

மதங்கள் என்பதே வெறும்
போதையாய் போச்சு
மனிதநேயம் கடையில் விற்கும்
சரக்காய் போயாச்சு

மத வெறிகளை களைவோம்
மதங்கள் போதிக்கின்ற மனிதநேயம்
பேனுவோம் - அனைவரும் ஒரு
குடையின் கீழ் ஒன்று படுவோம்


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -