அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Friday, January 31, 2014













வண்ண வண்ணமாய்
வாசனை மிகுந்தததாய்
செடியிலும் படர் கொடியிலும்
இதழ்கள் மலர்ந்து பூத்தாயோ...

மழை நின்ற பின்னே
தோன்றிய வானவில்லின்
சாயம் கொண்டுதான்
உனக்கு வர்ணம் சேர்த்தாயோ...

இல்லையேல் உன்னிடம்
உறவாடிட வந்தமர்ந்து சென்ற
வண்ணத்துப் பூச்சியிடம் தான்
வர்ணங்களை திருடிக் கொண்டாயோ

யார் சொல்லித்தான் அறிந்தனவோ
திசை மாற்றும் வண்டுகளும்
நீ வயதுக்கு வந்த மொட்டில்
பூப்படைந்த சேதிதனை...

இல்லையேல் நீதான் காற்றை ஏமாற்றி
தலையசைத்து சமிக்ஞை செய்தாயோ
படை எடுத்து வருகின்றது
உன்னில் சுரந்த தேன் அருந்த...


             -முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -