அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, January 7, 2014













அன்னார்ந்து பார்த்து
அடுத்தவன் ஏங்கும்
அன்பு நிறைந்த
அழகான வாழ்க்கை
அந்த ஏழை வாழ்வு...

ஆயிரக்கணக்கில்
ஆண்டு தோரும்
ஆஸ்தி சம்பாதிப்பவன்
ஆழ்ந்து உறங்கியதில்லை
ஆறு நொடி கூட
ஆறுதலாக...

இன்பகரமாக
இனைந்து கொண்ட
இந்த உண்னதமான
இரண்டு ஜீவன்கள்...

ஈகை கொடையாளன்
ஈரைந்து மாதத்தில்
ஈன்ரெடுக்க கொடுத்தான்
ஈகையாக குழந்தையை...

உழைப்பே என்றும்
உயர்வு தரும் - துனை
உடனிருக்க இந்த
உலகிலே வேரென்னதான்
உயர்ந்த சொத்தாக வேனும்...

நிம்மதியும், இன்பமும்
நித்தம் நித்தம்
நிலைபெருவதும்
நிசப்தங்கள்
நிலவுவதும் இங்கே தான்...

புன்முறுவலோடு
புசிப்பதும்
புன்னகையோடு
புறப்படுவதும் இங்கே...

கட்டாந்தரை கூட
கனப்பொழுதினில் தந்திடும்
கவலையில்லாத ஆழ்ந்த
கண்ணுரக்கம்...


       -முஹம்மது ஆரிப் அஸ்றப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -