அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Sunday, February 16, 2014


















அழையாத விருந்தாளியாக
என்னிடமே வந்தாய்
அனுதியின்றியே என்
கிளையிலேஅடைக்களம்
புகுந்து கொண்டாய்

அழையாமல் வந்தாலும்
உன்னையும் அன்போடு
ஆதரித்து என்னுடனே
அரவனைத்து கொண்டேன்

என்னிடமிருந்தே உணவும்
நீரும் திருடி கொண்டாய்
நன்றி கூட இல்லாமல்
என்னையே கொஞ்சம்
கொஞ்சமாய் வாழ்ந்து
கொண்டே அழிக்கவும்
தொடங்கிவிட்டாய்

எத்தனை எத்தனையோ
காலநிலை சீற்றத்தாலும்
ஆணிவேர் ஊன்றி அசையாமல்
நின்ற என்னை அணு அணுவாய்
அழிக்க தொடங்கிவிட்டாயே

என்னுடனே உயிராய்
உறவாடி வாழ்ந்த நீயும்
இன்று அந்த உயிரயே
பறித்து கொண்டிருக்கிறாயே

உன் குணம் எனக்கு
அன்றே தெரிந்து
இருந்தால், அக்கணமே
உன்னையும், உறவையும்
அறுத்து விட்டிருப்பேன்


              -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -