அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Monday, February 17, 2014














விடிகாலை நேரம் உறக்கம்
கலைந்து எழுந்து கொண்டேன்
என் அறையில் ஒரேயொரு
இரவு விளக்கு மட்டும் தனியே
ஒளிர்ந்து கொண்டிருந்தது...

நம் உறக்கத்தை உற்றுப்பார்த்து
கொண்டே இருக்கின்றன இந்த
இரவு விளக்குகள் என்ற என்னத்தில்
என் மனதும் லயித்து இருந்தது...

இந்த இராப் பொழுதிலே எத்தனை
ஆயிரமாயிரம் விளக்குகள் விழித்து
கொண்டிருக்குமோ...

நம் இரவு உறக்கத்தை
உலவு பார்க்க...

இரவு விளக்குகள் நம் உறக்கத்தின்
துணைவன் போலும், இவைகள்
தமக்கு தாமே முகத்திரை இட்டு
தன் ஒளியை மறைத்துக் கொள்கிறது...

இரவு விளக்குகள் நமது
காதுகளுக்கு கேட்காத
எதையோ முனுமுனுக்கின்றன
ஒரு வேலை தமக்கு தானே
எதை எதையோ பேசிக்
கொள்கின்றன போலும்...

இரவு விளக்குகளின் வெளிச்சமோ
சிறுமியின் பிஞ்சு விரல்களை போல
எத்தனை மிருது, எத்தனை ஈர்ப்பு...

இரவை கடந்து செல்ல உறக்கம்
என்ற ஒற்றைப் படகே...!
முடிவில்லாமல் யாவர் அறைகளிலும்
மிதந்து நீந்தியபடியே...!

இரவின் பேராற்றில் செல்லும்
உறக்கம் என்னும் இந்த படகு
சலனம் இல்லாது நீந்துகிறது
இரவு விளக்குகளின் துடுப்புகளால்...


                  -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -