அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, March 18, 2014












அரும்பாக தோன்றிய மொட்டு
மெதுவாக மலர்ந்தால் போல்
படிப்படியாக வளர்ந்து இன்று
பூரண மலராக முழுமதி தோன்றுகிறது
அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக

இவ் அழகை காண மலர்ந்த
தோட்டத்து மல்லிகையாக
மின்னிடும் மின்மினியாக
வானத்து விண்மீன்கள் கொத்து
கொத்தாக பூத்திருக்க

நிலவொளியில் நிறைந்து அலைததும்பும்
பாற்கடலிலே முத்துக் குளிக்கவே
சாம்ராஜ்ய அரசிலங் குமரியாய் நிலவரசி
வலம் வருகிறாள் மெதுவாக மேகத்தினூடே
அரண்மனைக் காவலர்களாய் ஆடையணியா
விண்மீன்களின் துணை கொண்டு

மூடி இருந்த ஜன்னல் திரைவிலக்கி
மெல்ல அதனருகே கவிழ்ந்து படுத்து
கால்களிரண்டும் மேலும் கீழுமாய் நடனமாட
படிப்பதற்காய் விரித்து வைத்த புத்தகமும்
திறந்தபடியே எனை எதிர்பாத்து தவித்திருக்க

எனதிரு கண்களும் உள்ளமும் மட்டுமே
ஏனோ ஜன்னல் வழியே அழையா
விருந்தாளியா உல் நுழைந்து இருந்த
பெண்ணிலவோடு ஏதேதோ மௌன
பாசைகளில் பேசிக் கொள்கிறது...


                       - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -