அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Wednesday, March 5, 2014


















இருவர் கண்களும்
கலக்கின்ற நிமிடங்கள்
இருவரும் மௌனங்கள்
புரிகின்ற தருணங்கள்

இருவர் கால்களும் சேர்ந்து
தொடர்கிற நடனங்கள்
முதல் காதலும் பிறக்கின்ற
இளமைப் பருவம்

ஏதேதோ மாற்றங்களும்
நடக்கின்ற என் வயசும்
சிறகுதட்டி பறக்கும் பட்டாம்
பூச்சியாய் என் மனசும்

ஒற்றை மரம் போலவே செத்துப்
பட்டுப் போய்க்கிடந்தேன்
உன்னைப் பார்த்த அந்த நொடியே
உயிரும் பிழைத்து துளிர்த்தேன்

மேகங்கள் எல்லாம்
தலைகீழாய் மிதக்க
வெட்கங்களும் வந்து
வார்த்தைகளை விழுங்க

பொத்திப் பொத்தி வச்சு
இருந்த மனசும்
அறிந்தே தொலையுதே
இன்று சுகமாக



                        -முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -