அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, March 4, 2014








காலம் கடந்தும்
கடக்க வில்லை
கண்ணே...

உன் மேல்
நான் கொண்ட
காதல்...

அன்று
ஒற்றை ரோஜா
பரிமாற்றத்தால்
மலர்ந்த காதல்...

இன்றும்
பல மலர்கள்
சேர்ந்த பூங்கொத்தாக...

வயது முதிர்ந்தும்
முடியவில்லை
நாம் கொண்ட
காதல்...

பதினெட்டில்
மட்டுமே மனம்
காதலுக்காய்
வளையுமா என்ன...?

அறுபது ஆகியும்
நம் மனது
வளைகிறது நாம்
கொண்ட காதலில்...

பதினெட்டில் வந்து
அறுபதிலும் இன்று
நிலைத்து நிற்கிறதே
நம் காதல்...

உன் தோல்கள்
சுருங்கிய போதிலும்
உன் தோல்கள்
சாயும் ஆசையோ
சுருங்கவில்லை...

உன்
அழகு போர்த்திய
தோலணிகள் சுருங்கட்டும்...

ஆடை
அலங்காரம் கூட
அணைந்து போகட்டும்...

உனக்கு நான்
எனக்கு நீ
மனம் தளராமல்
கைகள் இறுகப்
பற்றட்டும்...

பெரும் உறுதியாய்
உலகை வெல்லும்
நம் முதுமைக்
காதல்...

காலம் நம்மை
வீழ்த்தி கல்லறை
சென்றாலும் அங்கும்
வாழுமே...

நிரந்தரமாக....


             -முகம்மது ஆரிப் அஷ்ரப் ஹான்


Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -