அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, March 4, 2014















உனது உருவத்தையே
பிரதிபலித்தாலும்
நிழல்
உனக்கு சொந்தமில்லை !

நிழலுக்கு யாரும்
வெட்டினாலும்
வலிப்பதில்லை
குருதி வடிவதுமில்லை!

புலன்களில்லாத
போலி அது
பலன்களில்லாத
வாலுமது!

உன்செய்கையை
பிரதி பண்ணும்
நிழலுக்கு
என்றும்
உன் பெயரில்லை
அதை
நிழல் என்றுதான்
அழைப்பர்!

உனது காலடியிலே
விழுந்து கிடக்கும்
நிழல்
உன்னை விட்டுப்பிரிய
மனமின்றி
கட்டிக்கொண்டு
அழுவது
தெரியுமா உனக்கு?

உதறினாலும்
விடுகின்றதில்லையே
அதட்டினாலும்
அகன்று
செல்லுதில்லையே!

நீ பார்க்கும்
உனது நிழல்!
உனைப்பார்க்குமா?

இருட்டிலும்
உன்னை அது
தொடர்கின்றது
உன்னால்தான்
அதை பார்க்க
முடிவதில்லை!

ஒளியின் கீழே
சரியாய் நின்றால்
உனக்குள்
மறையும் நிழல்!

இறை அருளை
அள்ளிப்பருக
விலகும்
உன் மன இருள்!


                     -உமர் அலி முகம்மதிஸ்மாயில்

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -