அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Friday, March 7, 2014











தேடித் தேடிப் பெற்றதால்
என்னவோ
செல்வந்தன், செல்வம்
தண்ணீரென ஓரிடமும்
நிற்காமல் ஓடுகிறது...

உண்ணாமல், உடுத்தாமல்
பதுக்கி வைத்தும்
உறங்காமல் விழித்துக்
காத்து நின்றும்...

காண்ணாக காக்கின்றாய்
நீயும் காசினை
அது காக்காமல் கூட போகும்
ஓர் நாள் உன்னை...

நீ மண்ணாக போகும்
எதிர் நாளில்
உன்னை பாதிக்காது போகும்
இந்த உலகம்...

வாடி நிற்கும் வறியவர் தேவையறிந்து
நாடி வந்து ஈவதே நல்லவர்
செய்கை ஆகும்..

நல்லெண்ணம் கொண்டு
நீயும்
இனிதே என்றைக்கும்
ஈகை செய்...


   - முஹம்மது ஆரிப் அஸ்ரப் ஹான் 

{ 1 கருத்துக்கள்... read them below or add one }

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -