அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Tuesday, February 18, 2014












உயர்வு தாழ்வு
கொண்ட மலைப்
பிரதேசம்...

ஏற்றமும், இறக்கமும்,
வலைவும், சுற்றுமே
பாதைகளாக இங்கு...

பயந்து கொண்டால்
பயணம் எவ்வாறு
நிறைவு பெறும்...

நம் வாழ்க்கையும்
மேடு பள்ளமும்
நிறைந்தவையே...

இன்பமும், துன்பமும்
சுழற்சியாய் என்றும்
உன்னுடனே சுழலும்...

துன்பத்தில் நீயும்
துவன்டு மனமும்
உடைந்து...

இப் பாதையிலே
நீயும் வழுக்கி
விழுந்தால்...

தளர்ந்து விடாதே
உன் பாதையாகவே
அதனை மாற்று...

முயன்றால் எதனையும்
சாதிக்கலாம், வெற்றியும்
பெறலாம்...

விழுந்த இடத்திலே
அடங்கி சோர்ந்து
கிடந்தால்...

உன் வாழ்க்கைப்
பயணம் எப்படி
முழுமை பெறும்...

முஹம்மது ஆரிப் அஸ்ரஃப் ஹான்
FEBRUARY 18, 2014

Leave a Reply

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -