அதிகம் வாசித்தவை

Posted by : Unknown Monday, March 10, 2014













வானம் உற்றும நோக்குகிறது
வனம் எட்டித் தேடுகிறது
பூமி சுற்றி தேடுதல் வேட்டையில்....

இலக்கை நோக்கி பறந்திட
நின்மதி பெருமூச்சி விடுமுன்னே
என்ன மந்திரமோ மாயமானது....

தொலைத்து விட்டு அவதியில்
பெரும் பாடு படுகிறது
ஏற்றிவிட்ட தேசம் புழுங்கி வாடுகிறது

கனவோடு வந்தவர்கள் சிலர்
கற்பனையோடு சென்றவர்கள் பலர்
வரவை நோக்கி காத்திருக்க
வரவில் இன்பம் பூத்திருக்க ஏமாற்றி
பதற வைத்து புதிராய் போனது .....

வாணிபம் செய்ய செல்பவனும்
வணிகத்திற்காய் வந்தவனும்
விடுமுறை கழிக்க செல்பவனும்
தொழிலை தேடி வருபவனையும்
முகமன் கொடுத்து வரவேற்றது
சிப்பந்தியின் விமானம்.....

பறக்கிற தூரமும் இறங்குற வரைவும்
தரையிலிருந்து உச்சியின் உயரம்
மேகத்தின் அளவுகோலும் பாது
காப்பு கவசங்களும் கருப்பு
தகவல் தாங்கிய பெட்டியும்.....

தொடார்பு பொருத்திய கருவியோடும்
தொடர்பெல்லை நோக்கியே பறந்தது
தொடர்பின்றி எங்கேயோ விஞ்ஞான 
தொழில்நுட்பம் மறைந்தது

கிழவியை கொள்ளிவைக்க மகனை
தேடுகிறது நெடு நாள் பிரிந்து வாடும்
மல்லிகை முதலிரவு கனவோடு 
வீற்றிருக்கிறது கைப்பிடிக்கும் 
மணவாளனின் கற்பனையும்
சிதற வைத்து கதற எங்கே 
மறைந்ததோ..........?

சிலர் கடலில் மூழ்கி பார்க்கின்றார்
தரையில் தடையத்தை தேடி அலசுகிறார்
பெரும்பாலானோர் கடத்தப் பட்டிருக்கும் 
என்கின்றார் உடைந்து சிதறி விட்டதோ
முன்முனுக்கின்றர்......

எது எப்படியோ சேதமின்றி உயிர்
சேதாரமின்றி இலக்கை நோக்கிய
அவர்களின் இலட்சியப் பயணம்
வெற்றியடைய இறைவனிடம் 
இறைஞ்சுபவனாய்...

தாய்க்கு மகனும் துணைவிக்கு
கணவனும் குடும்பத்திற்கு
தலைவனும் திரும்பி கிடைக்கப்பெற
என் தொப்புள் கொடி உறவுக்காய்
மன்றாடு பவனாய் பிரார்த்திக்கிறேன்


        - கவிஞர் முபாறக் 


{ 2 கருத்துக்கள்... read them below or Comment }


  1. குடும்பத்திற்கு
    தலைவனும் திரும்பி கிடைக்கப்பெற 
    என் தொப்புள் கொடி உறவுக்காய் 
    மன்றாடு பவனாய் பிரார்த்திக்கிறேன்
    ஆமீன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... ஷரீப்

      Delete

என்னுள்ளத்து கதவை மெல்ல தட்டி அழைத்த எண்ணங்களுக்கு கற்பனை சொற்கள் கொண்டு வரிகள் கொடுத்த போது...

- Copyright © நிலாத்தூறல் - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -